25-ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-47

14 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்,வரும் 25-ந்தேதி காலை விண்ணில் ஏவப்படவுள்ளது. 

இஸ்ரோ தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட், வரும் 25-ந்தேதி காலை 9 புள்ளி 28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் செலுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் XL வகையில் 21-வது ராக்கெட் என்பதுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 74-வது ராக்கெட் என்ற பெருமையை இந்த ராக்கெட் பெறுகிறது.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 துல்லியமாக படங்களை அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள் 509 கிலோ மீட்டர் உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97 புள்ளி 5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது ராக்கெட்டை பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், இதற்கான கவுண்ட்டவுன் வரும் 23-ந்தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

Exit mobile version