விவசாயிகளுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வழங்கல்

ஆரணியில் நடைபெற்ற உழவர் திருவிழாவில் 17 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தமிழக அரசின் வேளாண்மை துறை, மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம், உழவர் திருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், 17 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version