கொரோனா நோயாளிகளுக்கு மோசமான உணவு – அரசு மருத்துவமனையின் அவலம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான உணவு வழங்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை எனவும், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன.

Exit mobile version