மனோகர் பாரிக்கர் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்திள்ளது.

கோவாவில், முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான கோப்புகள், மனோகர் பாரிக்கரிடம் இருப்பதாக, சமீபத்தில், ஆடியோ’ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால், ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்ற அச்சத்தில் பாஜக இருப்பதாகவும் இதனால் மனோகர் பாரிக்கர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. எனவே, மனோகர் பாரிக்கருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

Exit mobile version