தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்கு எதிர்ப்பு

தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மீக பயிற்சி வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாழும் கலை அமைப்பு சார்பில், தஞ்சை பெரிய கோயிலில் இன்றும் நாளையும் (07.12.18 – 08.12.18 ) ஆன்மீகச் சொற்பொழிவுகளும் தியானப் பயிற்சிகளும் நடைபெற உள்ளது. இதை நடக்கக் கூடாது என பெரிய கோயில் மீட்புக் குழுவினர் மற்றும் தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பல எதிர்ப்புகளையும் மீறி இந்த ஆன்மீக நிகழ்வு நடைபெறுவதால் தஞ்சை பெரிய கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆன்மீக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெங்கட் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், ஆன்மிக வகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் போராட்டங்கள் நடைபெற்றன.

 

 

Exit mobile version