மலைகளைக் காப்போம், சர்வதேச மலை நாளில் உறுதியேற்போம் : கன்னியாகுமரியில் பொதுமக்கள் உறுதியேற்பு

சர்வதேச மலை நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், குமரியில் உள்ள இயற்கையையும் மலையையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வது நமது கடமையாக கருத வேண்டும் என்று உறுதிமொழியேற்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் மீதமாக இருக்கும் மருந்துவாள் மலையும், ஆரல்வாய்மொழி கணவாயும், குமரி மாவட்டத்தின் பாதுகாப்பு அரணாக மட்டுமல்லாமல், இயற்கையை காப்பதுடன் மழைக்கு காரணமாகவும் அமைந்துள்ளன. இந்த இயற்கையையும், மலையையும், நீர்நிலையையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு முன்னோர் விட்டு சென்றது போல், நாமும் அடுத்து வரும் தலைமுறைக்கு விட்டு செல்வோம் என குமரியில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

 

Exit mobile version