பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 26 வயதான அசாருதீன்

கும்பகோணம் அருகே பல பெண்களை வைத்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்துவந்ததாக ஆட்டோ ஓட்டுநர் மீது பாத்திக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான அசாருதீன்.

ஆட்டோ ஓட்டுரான இவர் நண்பர்களுடன் சேர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்து இணையதளம் மூலம் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அதே பகுதியில் இருக்கும் ஜமாத் ஆட்களுக்கு தெரியவரவே, கடும் ஆத்திரமடைந்து ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து, அசாருதீனின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

அதை சோதனை செய்ததில், அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அசாருதீன் மீதும் அவரது நண்பர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதே போல் ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் தன்னை ஏமாற்றி, தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி பலமுறை தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 28 வயதான பெண் ஒருவர் கடந்த 22-ம் தேதி கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த இரு புகாரை பெற்றுகொண்ட தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர் ரூபேஷ்குமார் மீனா ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் உட்பட அவரது நண்பர்களை காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை முழுமையாக முடிந்த பின்பு இதில் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

Exit mobile version