தொலைநோக்கு திட்டங்களை வகுத்து பிரசாரம்- தமிழிசை

மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வரவேண்டும், தமிழகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை கொண்ட ஆட்சி வளம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது பிரசாரம் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில், திருச்செந்தூர் சப்ரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார். பின்னர் அவரிடம் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தூத்துக்குடியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொலைநோக்கு திட்டங்களை வகுத்து பிரசாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இதை தொகுப்பாக மாற்றி 27ம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை கொண்ட இந்த ஆட்சி வளம்பெற வேண்டும் என்ற நோக்கதுடன் தனது பிரசாரம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version