தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏடிஜிபி, உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்த ஜாபர்சேட், ஏற்கனவே வகித்து வந்த துறைகளில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் ஏடிஜிபியாக பதவி வகிக்கும் லட்சுமி பிரசாத் அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இதேப்போல சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக பதவி வகிக்கும் அசுதோஷ் சுக்லா, பதவி உயர்த்தப்பட்டு சிறைத்துறை டிஜிபியாகவும், அயல்பணியில் மத்திய அமைச்சக இணைச் செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள கூடுதல் டிஜிபி மிதிலேஷ் குமார் ஜா அதே பொறுப்பில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

காவல்துறை தொழில்நுட்பப்பிரிவு கூடுதல் டிஜிபி தமிழ்ச்செல்வன் மற்றும் காவல்துறை செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆசிஷ் பங்க்ரா ஆகியோர் அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version