கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தியை கொண்டாட தடை

கர்நாடகா சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது. எடியூரப்பாவுக்கு 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், திப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ஆண்டுதோறும் திப்பு சுல்தானின் பிறந்த தினம் பெரும் விமர்சியாக கலாச்சாரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version