குற்றால அருவியில் 2வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கனமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Exit mobile version