உற்பத்தி குறைந்தாலும் அதிகம் விற்பனையாகும் வாழைத்தார்கள்

நெல்லை மாவட்டத்தில், உற்பத்தி குறைந்த நிலையிலும் சந்தையில் வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கடந்த சில நாட்களாக கணிசமான சரிவை சந்தித்து வந்த வாழைத்தார் விற்பனை, தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. வாரத்தில், திங்கள் மற்றும் வியாக்கிழமைகளில் இயங்கும் சிறுமளஞ்சி வாழைத்தார் சந்தையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட ஏத்தன், தொழுவன், செந்தொழுவன் மற்றும் கற்பூரவள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை அதிகளவு கொள்முதல் செய்தனர். இதனால் வாழைத்தார்கள் எண்ணிக்கை குறைந்தாலும் நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version