தயாரிப்பாளர் சங்கத்தின் நிதி ரூ. 7 கோடியை விஷால் முறைகேடு செய்ததாக புகார் – நடிகர் விஷால் கைது 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சக்கட்ட மோதலுக்கு காரணம் என்ன? 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயை விஷால் முறைகேடு செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. இன்னும் பல அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்த, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி. சேகர், ஜே.கே.ரித்தீஷ், உள்ளிட்ட உறுப்பினர்கள், நேற்று முன்தினம், தியாகராய நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகங்களுக்கு பூட்டுப் போட்டனர். இதனிடையே தியாகராய அலுவலகத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த விஷால் வந்து பூட்டை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

 

 

Exit mobile version