நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில், நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் தொடுத்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கூடாது என நீதிபதியை, எதிர்தரப்பைச் சேர்ந்த ஐசரி கணேஷ் அணுகினார். இதையடுத்து நீதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஐசரி கணேஷ் மீதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஐசரி கணேஷ், திருநங்கைகள் மற்றும் அனாதை குழந்தைகளின் நலனுக்காக 10 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சட்டப்பணிகள் ஆணையத்திடம் இரண்டு வாரங்களுக்குள் பணத்தை ஒப்படைக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Exit mobile version