திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு சீல்

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், 7 கோடி ரூபாயை அவர் முறைகேடு செய்து விட்டதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்கு நிர்வாகிகள் பூட்டு போட்டனர்.

இதனை அடுத்து, அலுவலகம் சென்ற விஷால், பூட்டை உடைக்க முயற்சித்ததோடு, போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நடிகர் விஷால் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாவட்ட பதிவாளர் சேகர் மற்றும் துணைப்பதிவாளர் செல்வி சுந்தரி ஆகியோர் சீல் வைத்தனர்.

Exit mobile version