பீகாரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உள்ளாட்சித் தேர்தலுக்காக பீகார் மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயன்படுத்துவதற்காக, பீகாரிலிருந்து 3 ஆயிரத்து 131 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஆயிரத்து 300 கட்டுப்பாட்டுக் கருவிகளும் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைத், தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள் சரி பார்த்தபின், அவற்றைப் பாதுகாப்பாக அறைக்குள் வைத்துப் பூட்டினர்.

 

Exit mobile version