மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜூடோ பயிற்சியாளரிடம் 2வது நாளாகத் தொடரும் தீவிர விசாரணை

ஜூடோ பயிற்சியாளரிடம் 2வது நாளாக தீவிர விசாரணை தொடர்ந்து வருகிறது. இவரை கெபிராஜ் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜூடோ பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்ட கெபிராஜிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை.

இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் கெபிராஜை , அண்ணா நகரில் உள்ள அவரது பயிற்சி மையம் உள்ளிட்ட ஒரு சில இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்…

ஜூடோ போட்டிக்காக நாமக்கல் சென்று விட்டு காரில் திரும்பியபோது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக துருவி துருவி விசாரணை. எத்தனை ஆண்டுகளாக ஜூடா பயிற்சியாளராக இருக்கிறார்? எத்தனை மாணவிகள், இளம் பெண்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்?…

சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் அவரது இல்லத்திற்கு 10 மணிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பத்மா சேஷாத்திரி குழும பள்ளியைத் தவிர வேறு ஏதாவது பள்ளியில் பணியாற்றியுள்ளாரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தபின் இன்று பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்

Exit mobile version