புரோ கைப்பந்து லீக் போட்டிகள் இன்று தொடக்கம்

கொச்சியில் 6 அணிகள் பங்குபெறும் புரோ கைப்பந்து லீக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டை தொடர்ந்து புரோ கபடி லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது கைப்பந்து போட்டிகளிலும் லீக் சுற்றுகள் கொண்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஸ்பார்ட்டன்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், அகமதாபாத் டிபெண்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ், யு மும்பை வாலி, கோழிக்கோடு ஹீரோஸ் ஆகிய 6 அணிகள் பங்குபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

Exit mobile version