இந்த சீனில் நடிக்கமாட்டேன் : பட வாய்ப்புகளை மறுக்கும் பிரியாமணி

நீச்சல் உடையில் நடிக்க மறுத்து இந்தி பட வாய்ப்புகளை  நடிகை  பிரியாமணி  நழுவ விடுகிறார்.

தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிற நடிகை பிரியாமணி தமிழில் ‘கண்களால் கைது செய்’ என்னும் படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மற்றும் பிரியாமணிக்கு திருப்பு முனையாக அமைந்த படம் ”பருத்தி வீரன்” , அதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இதனை தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், ராவணன், சாருலதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இப்போது இணையதள தொடர்களில் நடிக்க தொடங்கி உள்ளார். மேலும் இந்தியில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வந்ததாக சில தகவல்கள் வெளியானது அதற்கு நடிகை பிரியாமணி “எனக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவற்றில் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருப்பதால் ஏற்கவில்லை. அப்படி கவர்ச்சியாக நடிப்பதில் உடன்பாடு இல்லை.” என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

Exit mobile version