பிரியா வாரியரை கண்ணடித்து கவிழ்த்த நடிகை

நடிகை தீபிகா படுகோனே கண்ணடிக்கும் அழகில் கவிழ்ந்து விட்டதாக நடிகை பிரியா வாரியார் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்தவர் நடிகை பிரியா வாரியார். அந்த படத்தில் இடம்பெற்ற காதல் காட்சியில் கண்ணடித்தன் மூலம் ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் பிரியா வாரியார். அந்த வீடியோ பிரபலங்கள் உட்பட பலரும் பகிர்ந்து அவரை புகழ்ந்தனர்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே கண்ணடிக்கும் அழகில் தான் கவிழ்ந்து விட்டதாக நடிகை பிரியா வாரியார் தெரிவித்துள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணாக  “சாபாக்”  படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நடிகை தீபிகா படுகோனே ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்போல் முகத்தில் மேக் அப் அணிந்து இயக்குநருடன் பேசிக்கொண்டிருப்பது போல வீடியோ  வெளியானது. அதன் நடுவே அவர் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version