அரசு சட்டக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி

அரசு சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தனியார் சட்டக் கல்லூரி அமைக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். பேரவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த உடன் விழுப்புரம் சட்டக்கல்லூரி திறக்கப்படும் என்றார்.

Exit mobile version