தனியார் உணவு விநியோக ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் தனியார் உணவு விநியோக ஊழியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாநகர் அருகே தனியார் உணவு விநியோக ஊழியர்கள் சிலர் நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தனியார் நிறுவனத்தில் 3 ஆயிரத்து மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் உணவு வழங்க செல்லும் தூரத்தை கணக்கிட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் பழைய ஊதியத்தினை திரும்ப அளிக்க கேட்டால், விநியோக ஊழியர்களுக்கு பதிலாக வட மாநில ஊழியர்களை பணியில் அமர்த்துவதாக நிறுவனம் மிரட்டுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version