ஓடு பாதையிலிருந்து விலகிய தனியார் நிறுவன விமானம்

மங்களூரு விமான நிலையத்தில் துபாயிலிருந்து வந்த தனியார் நிறுவன விமானம் ஓடு பாதையிலிருந்து விலகியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் துபாயில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு விமானம் 183 பயணிகளுடன் தரையிறங்கியது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய போது, திடீரென ஓடுபாதையை விட்டு விலகி ஓட ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். உடனே விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக நிறுத்தினார். பின்னர் விமானத்தில் இருந்த 183 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினர். தகவல் அறிந்த விமான நிலைய அதிகாரிகள், தொழில்நுட்ப குழு வல்லுனர்கள் விரைந்து வந்து விமானத்தை பார்வையிட்டனர்.

Exit mobile version