ஆட்சிக்கு வந்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு முன்னுரிமை

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளீர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தின் கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அனைத்து இந்தியர்களுக்கும் குறைந்தபட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.

Exit mobile version