"மான் கி பாத்" நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் இன்று உரை

“மான் கி பாத்” எனப்படும் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியின் மூலம், 62-வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்…

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம், “மான் கி பாத்” எனப்படும் “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். 62-வது முறையாக இன்று வானொலி மூலம் காலை 11 மணிக்கு நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்துகிறார். நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது அகில இந்திய வானொலியில் காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

Exit mobile version