பிரதமரின் கலந்துரையாடல் ஜனவரி 20-ம் தேதிக்கு மாற்றம்

ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மோடி நடத்த இருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது..

பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுத  அவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு,   ஜனவரி 16-ஆம் தேதி   வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களுடன்  கலந்துரையாட பிரதமர் திட்டமிட்டிருந்தார்.  ஆனால் பொங்கல் , சங்கராந்தி விடுமுறை காரணமாக  மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் சிக்கல் இருந்தது.   எனவே, பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜனவரி 20- ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக,  மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version