பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் பிரேசில் பயணம்

பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டு செல்கிறார்…

பிரிக்ஸ் நாடுகளின் 11- வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டு செல்கிறார். எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. பிரதமரின் இந்த பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசவுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

Exit mobile version