2022 -ல் இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு – பிரதமர் மோடி

2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதில் சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரி முறைகள் குறித்து உறுப்புநாட்டு தலைவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.ஜி-20 மாநாட்டை இந்தியா முதல் முறையாக நடத்தவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version