பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றால் எதிர்க்கட்சியினர் கவலை-பிரதமர் மோடி

பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றால் இங்குள்ள சில அரசியல் கட்சியினருக்கு கவலை ஏற்படுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் குஷி நகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் விஜய் துபேவை ஆதரித்து பேசிய அவர், இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை குறிப்பிட்டார். இது போன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை கவலையடையச் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் அவர்களைத் திருப்பித் தாக்க, தேர்தல் கமிஷனின் அனுமதி கேட்டு நிற்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்

Exit mobile version