காங்கிரஸ் கட்சியின் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு !

காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவகம் எதுவும் அமைக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாடியுள்ளார்.

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த காவலர்கள் நினைவாக, லடாக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய காவல் நினைவுச் சின்னத்தையும், தேசிய காவல் அருங்காட்சியகத்தையும், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர் , நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு தமது மரியாதையை செலுத்துவதாகத் தெரிவித்தார். அமைதியை குலைக்கும் தீய சக்திகளை முறியடித்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தார்கள் என்றும் அவர் கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையிலான நினைவகம் எதுவும் அமைக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

Exit mobile version