ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

டெல்லி முன்னாள் முதல் முதலமைச்சர் ஷீலா தீட்சித் உடலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஷீலா தீட்சித் நேற்று மாலை, மாரடைப்பால் காலமானார்.டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஷீலா தீட்சித் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஷீலா தீட்சித் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆகியோரும் ஷீலா தீட்சித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version