பனிக் குகைகளில் தியானம் செய்த பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம், பனிக் குகைகளில் தியானம் செய்த பிரதமர் மோடி, இன்று பத்ரிநாத் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான 7வது கட்ட பிரசாரத்தை வெள்ளிக்கிழமை முடித்த பிரதமர் மோடி, சனிக்கிழமை, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற சிவபெருமான் கோயிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தார்.

கேதார்நாத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து, அங்குள்ள பனிக்குகையில் பிரதமர் மோடி தியானம் செய்தார். இந்தநிலையில், இன்று காலை கேதார்நாத் பகுதிகளை அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் செய்தியாளர் சந்தித்த பிரதமர், கேதார்நாத்தில் தரிசனம் செய்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக குறிப்பிட்டார். நாட்டு நடப்புகளில் இருந்து விலகி ஆன்மிக பயணம் மேற்கொண்டாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்து பத்ரிநாத் செல்லும் பிரதமர், அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

Exit mobile version