வரும் 8ம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி மாலத்தீவுக்கும், 9ம் இலங்கைக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வரும் 8ம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்கிறார். முதலில் தெற்காசிய நாடான மாலத்தீவுக்கு பிரதமர் செல்கிறார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சாலிஹ் அழைப்பை ஏற்று அவர் செல்கிறார். அங்கு இரு நாட்டு உறவு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அந்த நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.இதைத் தொடர்ந்து வரும் 9ல் நம் அண்டை நாடான இலங்கைக்கு பிரதமர் செல்கிறார். சமீபத்தில் டெல்லி வந்திருந்த இலங்கை அதிபர் சிறிசேன தங்கள் நாட்டுக்கு வரும்படி பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version