அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளிலுள்ள மூன்று சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஆகிவை பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளன. ரோஸ் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நெயில் தீவின் பெயர் ஷாகீத் த்வீப் என்றும் மாற்றப்பட உள்ளது. மேலும், ஹேவ்லாக் தீவு, சுவராஜ் த்வீப் என்றும் மாற்றப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் செய்து முடித்துள்ளது. வரும் 30-ம் தேதி அந்தமான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய பெயரைத் தீவுகளுக்கு சூட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version