பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் நேரில் வாழ்த்து

ஜப்பான் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, இந்திய மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவித்தார். தான் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை உறுதிச் செய்த ஜப்பான் பிரதமர், அதனை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார்.

பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்கு தனக்கு வாழ்த்து கூறியதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவுக்கு நன்றி தெரிவித்தார். முதன்முதலில் தொலைபேசி மூலம் தனக்கு வாழ்த்து கூறியது நட்பு நாடான ஜப்பான் தான் எனவும் சுட்டிக் காட்டினார்.

Exit mobile version