ராஜிவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை: தேர்தல் ஆணையம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில் பிரதமர் மோடி விதிமீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஊழல்வாதியாக தான் உயிரிழந்தார் என்று பிரதமர் மோடி பிரசாரத்தின் போது பேசியிருந்தார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் பிரசாரம் செய்ததாகவும் எனவே, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ராஜிவ் காந்தியை விமர்சித்த விவகாரத்தில், பிரதமர் மோடி, வன்முறை ஏற்படுத்தும் விதத்தில் பேசவில்லை எனவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version