பிரதமர் மோடியின் மதுரை வருகையையொட்டி ஐந்தடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. மதுரையில் நாளை மறுநாள் பிரசார பொதுகூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் மதுரை விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலைய வெளி வளாகத்தில் கடும் சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதிவிரைவு படை ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version