படைவீரர் கொடிநாள் நிதி – மக்கள் அனைவரும் பங்களிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

முப்படையினரின் கொடிநாள் நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் வானொலியில் உரையாற்றி வருகிறார். இன்றைய வானொலி உரையில், டிசம்பர் ஏழாம் தேதி கொடிநாள் வருவதையொட்டி அனைவரும் அதைக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். முப்படையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஒவ்வொருவரும் கொடிநாள் நிதிக்குத் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
சிபிஎஸ்இ சார்பில் டிசம்பர் மாதத்தில் உடல்நலம் தொடர்பான விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பள்ளிகளில் விளையாட்டு, யோகாசனம், நடனம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Exit mobile version