டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு நடைபெற்ற பல்சமய பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார்.

Exit mobile version