பிரதமர் மோடி இன்றிரவு திருப்பதிக்கு வருகை

பிரதமர் மோடி இன்றிரவு திருப்பதி வருவதை ஒட்டி பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2 நாள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இலங்கையிலிருந்து புறப்பட்டு இன்று மாலை இந்தியா திரும்புகிறார். திருப்பதி வரும் பிரதமர் மோடி, ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். மாலை ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆந்திர மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் அவரை வரவேற்கவுள்ளனர்.

இதனைதொடர்ந்து திருமலைக்கு சென்று ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம், செய்கிறார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார். பிரதமரின் திருப்பதி வருகையொட்டி, தேசிய பாதுகாப்புப்படை, மாநில புலனாய்வு துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version