வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்…

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வரும் 26ஆம் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்தநிலையில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இதற்காக வரும் 26ஆம் தேதி அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். கடைசி கட்டமாக மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காக வரும் 22ஆம் தேதி மனுத்தாக்கல் தொடங்குகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத் மாநில வதேரா ஆகிய தொகுதிகளில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version