பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், இந்தியா-சீனா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், எல்லை பிரச்சனை தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version