நாடு முழுவதும் பாஜக அலைவீசுவதாக பிரதமர் மோடி பேச்சு

நாடு முழுவதும் பாஜக அலை வீசுவதால் காங்கிரசுக்கும் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் தூக்கம் போய் விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டீஸ்கர் மாநிலம் பாடபாரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் தன்னை அவமானப்படுத்தி பேசி வருவதாக குற்றம் சாட்டினார். அவர்கள் என்னை மட்டுமில்லாமல் நாளை ஆதிவாசி மக்களையும் அவர்களது உடைகளையும் அவமானப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் பாஜக அலை வீசுவதாக கூறிய அவர், காங்கிரசும் மெகா கூட்டணிக்கும் தூக்கம் போய் விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Exit mobile version