சங்கல்ப் ஊர்வலத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை

பீகாரில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பா.ஜ.க தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி பாட்னாவில் நடைபெற்ற சங்கல்ப் ஊர்வலம் மற்றும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தளங்களை குண்டு வீசி தகர்த்த விமானப்படைக்கும், விங் காமாண்டர் அபி நந்தனுக்கும் வாழ்த்து தெரிவித்தார். கடந்த மாதம் 17 ஆம் தேதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க பீகாருக்கு வருகை தந்த பிரதமர் 20 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version