கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு -வெளியுறவு அமைச்சகம்

கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி சிங்கப்பூர் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

13 வது கிழக்காசிய உச்சி மாநாடு வரும் 14, 15 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 14 -ம் தேதி சிங்கப்பூர் செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆசிய நாடுகளை சேர்ந்த தலைவர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு மேம்பாடு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு உள்பட் பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு நடைபெறும் நிதி தொழில்நுட்ப மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளதாகவும் கூறியுள்ளது.

 

Exit mobile version