தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கொடை "பிரதமர் மோடி"

பிரதமர் மோடி, தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் கொடை என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வரும் 19 ஆம் தேதி அன்று தமிகம் வரும் பிரதமர், கன்னியாகுமரியில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார். கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகத்திற்கு பிரதமர் வரும்போது பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version