பிரதமர் மோடி நாட்டை அழிக்கும் நோக்கத்தில் உள்ளார் : வைகோ

பிரதமர் மோடி நாட்டை நாசமாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கல்லூரியில் தனியார் அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தமிழ் நாட்டிற்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே பிரதமர் மோடி பெரும் கேடு விளைவித்துள்ளார் என குற்றம் சாட்டினார். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நாட்டிற்கு விடுதலை கிடைக்கும் எனவும் வைகோ குறிப்பிட்டார்.

Exit mobile version