இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-30 செயற்கைக்கோளை நேற்று அதிகாலை 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் 5 மூலம், ஜிசாட்-30 விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, இன்சாட்-4 ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 தற்போது விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிசாட்-30 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்த்து செய்தியில், பல்வேறு வெற்றிகளை இஸ்ரோ குவிக்க வேண்டும் என தான் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version