இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

இலங்கையில் நடந்த கொடூரமான குண்டுவெடிப்பிற்கு கடுமையாக கண்டனத்தை தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளர். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், நமது பிராந்தியத்தில் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்திற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தன்னுடைய எண்ணங்கள் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது இரங்கல் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version