பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு : மாமல்லபுரத்தில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திக்க உள்ள நிலையில், மாமல்லபுரத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜிங் பிங் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்த உள்ளனர். இந்தியாவில் வாணிபம் மேற்கொண்ட யுவான்சுவாங் என்பவர் கடல் வழியாக மாமல்லபுரத்துக்கு வந்ததன் நினைவாக, இங்கு இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்தப் சந்திப்பின் போது இந்தியா – சீனா இடையே தொழில், வணிகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இந்தநிலையில் சந்திப்பு நிகழும் இடம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சுத்தம் செய்யும் பணியில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் முழு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

 

Exit mobile version